சிங்கப்பூர்!
அயல் தேசத்து ஏழைகளின் கூடு !
சொர்க்க பூமி என்ற பெயர் உண்டு!
சிங்கப்பூரியன் எனும் உள்ளூர்வாசிகளுக்கு சகல வசதிகள் இருந்தாலும் - எங்களுக்குசொர்க்கம் என்பது தாய் நாடு தானே!
வீட்டு உறவுகளை விட்டு வந்தோம்வாழ்க்கையை அனுபவிக்க அல்ல வாங்கிய கடனை அடைக்க!!!!
கணிணி துறையில் நான் பணிபுரிந்தாலும்கட்டிட தொழிலில் ஈடுபடும் தமிழர்களை நினைப்பதுண்டு . . .
அப்பப்பா???
கண்கள் கூட குளமாகின்றனகானல் நீராம் இவ்வுலகை நினைக்கும் போது !லிட்டில் இந்தியா . . .
இது இடம் மட்டுமல்ல . . .இலட்சக்கணக்கான இந்தியர்களின்இதயங்களின் சங்கமம்!வார இறுதி நாட்களில்தான்எத்தனை நெருக்கடிஎத்தனை கருத்து பரிமாற்றங்கள்எத்தனை துக்கம்எத்தனை சந்தோஷம்ஒன்றை புரிந்து கொண்டேன் - இதுஉறவுகளின் தொகுப்பு அல்லஉணர்வுகளின் தொகுப்பு . . . இந்தியாவின் அனைத்து பொருட்களும்இங்கே கிடைக்கின்றன..
தாயின் அன்பைத் தவிர . . .
தந்தையின் அறிவுரையைத் தவிர . . .
லிட்டில் இந்தியா . . .
என்னதான் கிடைக்கும் இங்கே?
கட்டியணைக்கும் நண்பனின் ஆறுதல் கிடைக்குமா !கண்ணுக்குள்ளே சுமக்கும் காதலியின் ஸ்பரிசம் கிடைக்குமா !!கட்டியவளின் கபடமில்லா காதல் தான் கிடைக்குமா???பெற்ற தாயின் விரல் கிடைக்குமா தலை கோதி விட - இல்லைபெற்றெடுத்த குழந்தையின் மழலை குரல்தான் கிடைக்குமா !!என்ன தான் சம்பாதித்தாலும்ஏழைகள் தான் நாங்கள் . . .பணம் பையில் இருந்தாலும்மனம் வெறுமையாய் தான் !!!
ஐயோ பாவம் !!!
அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை..நாங்கள் பூசிக்கொள்ளும் வாசனை திரவியம்எங்களின் செழுமையை உரைக்க அல்ல!
எங்கள் வியர்வை துளியை மறைக்க !!
கடல் தாண்டி வருவதினால் என்னவோகண்ணீரின் சுவை கூட மறத்து விட்டது !!! காத்திருக்கிறேன்!!
தாய் நாட்டில் நிரந்தரமான கால் பதிக்கும் அந்த நாளுக்காய் !!!
Tuesday, March 16, 2010
செல்போன்
விஞ்ஞான வீரிய புத்தகத்தின்
விநோதமான பக்கங்களில் ஒன்று நீ!
தரணியின் சிறந்த மொழிகளில் ஒன்றாம்
தமிழில் உனக்கு பெயர் முரண்பாடா என்ன??
என்னவென்று சொல்வது உன்னை கைபேசி !
கையடக்கபேசி!! கைதொலைபேசி!!!
கண்ணே!
நமக்கேன் முரண்பாடு கைபேசி என்றே இருக்கட்டும்...
கண்ணே என்று நான் சொல்வதால் கோபம் வேண்டாம் என் மீது!!
குழந்தையை கூட கண்ணே என்று அழைப்பதுண்டு ஆம்!
குழந்தையும் நீயும் ஒன்று தான்.!!!
தொட்டவுடன் அழுகையை நிறுத்துவதால் தயக்கமின்றி சொல்வேன் நீயும் ஒரு குழந்தை என்று... உண்மைதான் இது!
உன்னையும் சேய் போல்தான் பாதுகாக்கின்றோம்..
உறக்கம் நீ கொள்ள பஞ்சு விரிப்பு!
உறக்கத்தில் நீ அழுதால் அரவணைப்பு!!
உவமை இது போதுமா? இன்னும் வேண்டுமா??
மட்டுமல்ல அன்பே!
பெண்மையும் நீயும் ஒன்றுதான்...ஆம்!
உன்னைப்பற்றிய எதிர்பார்ப்புகளில்ஆண்கள் என்றுமே திருப்தியடைவதில்லை!
அற்ப மனது கண்டபடி அலைபாயும்....
எழுத்து பரிமாற்றத்தை துண்டாடிய எழிட்சி மிகு சூழ்ச்சி மந்திரம் நீ!!!
ஆம்! உண்மை தான்..அஞ்சல் தொடர்பு எனும் பழமொழி தொலைந்துமின்னஞ்சல் எனும் அறிவியலின் பிடியில் இப்போது...
உன் மீது தவறில்லை!
விஞ்ஞானம் என்பதே பழயதை ஒழிக்கும் புது பரிணாமம் தானே மானிடத்தில் நிகழும் சுக துக்கங்களை வினாடியில் கடத்தும் சாகசப் பிறவி நீ....
எனக்கு மட்டுமல்ல! மனிதருக்கெல்லாம் நீ வரப் பிரசாதம் தான்!!குழந்தைகளின் பொம்மை நீ! குமரிகளின் அழகு சாதனப்பெட்டி நீ!!
காதலர்களின் முதல் முத்தம் நீ!!! குடும்பத்தினரின் கைக்குழந்தை நீ!!!!முதியோர்களின் ஊன்றுகோல் நீ!!!!!
வார்த்தைகள் தெரியவில்லை வர்ணித்து உன் புகழ் பாட...
மொத்தத்தில் முற்று புள்ளி உன்னில் இருந்தாலும் முடிவு பெறா சகாப்தம் நீ...
தொடரட்டும் உன் சேவை!! தொலைபேசியின் சினுங்கலாய்,
எழுதியவன் அன்பன் புஷ்பராஜ்
அர்பணிக்கிறேன் எனது பலகையில்.....
விநோதமான பக்கங்களில் ஒன்று நீ!
தரணியின் சிறந்த மொழிகளில் ஒன்றாம்
தமிழில் உனக்கு பெயர் முரண்பாடா என்ன??
என்னவென்று சொல்வது உன்னை கைபேசி !
கையடக்கபேசி!! கைதொலைபேசி!!!
கண்ணே!
நமக்கேன் முரண்பாடு கைபேசி என்றே இருக்கட்டும்...
கண்ணே என்று நான் சொல்வதால் கோபம் வேண்டாம் என் மீது!!
குழந்தையை கூட கண்ணே என்று அழைப்பதுண்டு ஆம்!
குழந்தையும் நீயும் ஒன்று தான்.!!!
தொட்டவுடன் அழுகையை நிறுத்துவதால் தயக்கமின்றி சொல்வேன் நீயும் ஒரு குழந்தை என்று... உண்மைதான் இது!
உன்னையும் சேய் போல்தான் பாதுகாக்கின்றோம்..
உறக்கம் நீ கொள்ள பஞ்சு விரிப்பு!
உறக்கத்தில் நீ அழுதால் அரவணைப்பு!!
உவமை இது போதுமா? இன்னும் வேண்டுமா??
மட்டுமல்ல அன்பே!
பெண்மையும் நீயும் ஒன்றுதான்...ஆம்!
உன்னைப்பற்றிய எதிர்பார்ப்புகளில்ஆண்கள் என்றுமே திருப்தியடைவதில்லை!
அற்ப மனது கண்டபடி அலைபாயும்....
எழுத்து பரிமாற்றத்தை துண்டாடிய எழிட்சி மிகு சூழ்ச்சி மந்திரம் நீ!!!
ஆம்! உண்மை தான்..அஞ்சல் தொடர்பு எனும் பழமொழி தொலைந்துமின்னஞ்சல் எனும் அறிவியலின் பிடியில் இப்போது...
உன் மீது தவறில்லை!
விஞ்ஞானம் என்பதே பழயதை ஒழிக்கும் புது பரிணாமம் தானே மானிடத்தில் நிகழும் சுக துக்கங்களை வினாடியில் கடத்தும் சாகசப் பிறவி நீ....
எனக்கு மட்டுமல்ல! மனிதருக்கெல்லாம் நீ வரப் பிரசாதம் தான்!!குழந்தைகளின் பொம்மை நீ! குமரிகளின் அழகு சாதனப்பெட்டி நீ!!
காதலர்களின் முதல் முத்தம் நீ!!! குடும்பத்தினரின் கைக்குழந்தை நீ!!!!முதியோர்களின் ஊன்றுகோல் நீ!!!!!
வார்த்தைகள் தெரியவில்லை வர்ணித்து உன் புகழ் பாட...
மொத்தத்தில் முற்று புள்ளி உன்னில் இருந்தாலும் முடிவு பெறா சகாப்தம் நீ...
தொடரட்டும் உன் சேவை!! தொலைபேசியின் சினுங்கலாய்,
எழுதியவன் அன்பன் புஷ்பராஜ்
அர்பணிக்கிறேன் எனது பலகையில்.....
Thursday, March 11, 2010
அயல் நாட்டு ஊழியனின் மனைவி....
அலைபேசி அழைக்கும் போதெல்லாம்
உன் குரலோசை கேட்க
என் இதயம் துடிக்கிறது.
அணைக்க துடிக்கும்
உன் கரங்களை விட
என் கண்ணீரை துடைக்க உதவும்
கரங்களையே தேடுகிறேன்.
காத்திருந்து காத்திருந்து
இதயமும் இமையமும் கூட
வெற்று நிலமாகிவிட்டது.
புரியவில்லையா என் நெஞ்சம்
புரியாமல் துடிப்பை அடக்கும்
என் இதயத்தின் ஓசை
கேட்கவில்லையா உன் செவிகளில்.
ஐம்புலன்களையும்
அடக்க தெரியுமாம்
பெண்மைக்கு?
அறிவுகெட்ட சமுதாயம்,
சொன்னவனுக்கு எங்கே
தெரியும்பென்மையின்
உணர்ச்சியும் உத்வேகமும்.
காமமும் காதலும்தான்
ஆண்மையா?
அப்போது மிருகத்திடம்
உடைமையை வைத்துகொள்,
ஏன்
பெண்மையை
வதைக்கிறாய்?
பெண்மையை சோதிக்காதே!
என்
மனதின் மென்மையை
புரிந்துகொள்.
வந்துவிடு
என்னை ஆட்கொண்டுவிடு.
மிருகத்தின் உத்வேகமும் பெண்மையிடம் தோற்று போக காத்திருக்கிறேன்!!!!!!
உன் குரலோசை கேட்க
என் இதயம் துடிக்கிறது.
அணைக்க துடிக்கும்
உன் கரங்களை விட
என் கண்ணீரை துடைக்க உதவும்
கரங்களையே தேடுகிறேன்.
காத்திருந்து காத்திருந்து
இதயமும் இமையமும் கூட
வெற்று நிலமாகிவிட்டது.
புரியவில்லையா என் நெஞ்சம்
புரியாமல் துடிப்பை அடக்கும்
என் இதயத்தின் ஓசை
கேட்கவில்லையா உன் செவிகளில்.
ஐம்புலன்களையும்
அடக்க தெரியுமாம்
பெண்மைக்கு?
அறிவுகெட்ட சமுதாயம்,
சொன்னவனுக்கு எங்கே
தெரியும்பென்மையின்
உணர்ச்சியும் உத்வேகமும்.
காமமும் காதலும்தான்
ஆண்மையா?
அப்போது மிருகத்திடம்
உடைமையை வைத்துகொள்,
ஏன்
பெண்மையை
வதைக்கிறாய்?
பெண்மையை சோதிக்காதே!
என்
மனதின் மென்மையை
புரிந்துகொள்.
வந்துவிடு
என்னை ஆட்கொண்டுவிடு.
மிருகத்தின் உத்வேகமும் பெண்மையிடம் தோற்று போக காத்திருக்கிறேன்!!!!!!
Subscribe to:
Comments (Atom)